Sunday, September 21, 2014

eye opener


வசந்திக்கு காலையிலிருந்து ஒரே தலை வலி , ஏகப்பட்ட வேலை , மனதில் ஆயிரம் கவலைகளுடன் வேலை செய்து கொண்டிருந்தாள் . ஆபீசில் இன்று ஒரு முக்கியமான  பிரெசெண்ட்டேஷேன்  செய்தாக வேண்டும் , நேற்று  இரவு கண் முழித்து வேலை செய்ததில் வந்த தலை வலி , குழந்தைகளுக்கு எக்சம்ஸ்  வேறு , என்ன செய்வது ,அவர்களை படிப்பதற்கு எழுப்ப வேண்டும் , இல்லைஎன்றாலும் , வேலை, எழுந்திருக்க வேண்டியதுதான் , ஒவ்வொரு வேலையாக செய்யும் போதும் மனது மிகவும் வேதனை பட்டது .

 ஒரு நாளானும் யாரேனும் தட்டில் சாப்பாடு போட்டு கையில் தர மாட்டர்களா  என்று.  வேகமாக வேலையை முடித்து விட்டு, குழந்தைகளை கிளப்பி , ஹோம் வொர்க் செக் செய்து விட்டு , ஸ்கூல் வேனில் ஏற்றி  விட்டு விட்டு ஆபீஸ் கிளம்பினாள்  மனதில் பாரத்துடன் .

 அவளது கணவன் ஊரில் இல்லை , எல்லா வேலையையும் தனியாக செய்யும் பொது மனது தளர்ந்து போகிறது , போகும் வழியில் கிரெடிட் கார்டு பேமென்ட்  செய்ய வேண்டும் , நேற்று  இரவு ஆபீஸ்   வேலையில் பிஸியாக இருந்ததால் இது மறந்து போய்விட்டது , காரில் வேறு பெட்ரோல் இல்லை , ஒரே எரிச்சலாக வந்தது , ஹஸ்பெண்ட்  ஊரில் இருந்தாலும் எந்த வேலையும் பெரிதாக செய்யப்  போவதில்லை , எப்போதும்  லேப்டாப்பும் கையுமாகவே இருப்பான் , எந்த ஒரு கேள்விக்கும் ஒரு சொல்லில் பதில் சொல்வான் , அவனுக்கு எதற்கும் டைம் கிடையாது , அவனுடைய வேலையின் நிமித்தம் வேறு ஊருக்கு வந்திருக்கிறார்கள் .

இதை எல்லாம் யோசித்துக்  கொண்டிருக்கும் போதே பெட்ரோல் பங்க் வந்தது, பெட்ரோல் நிரப்பிக்கொண்டு காரில் வேகமாக ஆபீஸ் போனாள் , அங்கு  நுழைந்தவுடன் தான்  ஞாபாகம் வந்தது , பிரேக்ப்பாஸ்ட்  சாப்பிடாதது . என்ன வாழ்க்கை இது  என்று  நினைக்கும்போதே அழுகையாக வந்தது , லிப் ட்  வொர்க் செய்ய வில்லை , மெதுவாக படி ஏறினாள் , ஒரே மூச்சிறைப்பு, இதற்காக டாக்டரிடம் செல்வதற்கு   வீக்  என்ட்  வரைக்கும் வெயிட் செய்ய வேண்டும் , எதற்காக வாழவேண்டும் என்று புரியவில்லை , கோவம் கோவமாக வந்தது ,

ரெஸ்ட்  ரூமிற்கு சென்று முகத்தை சரி செய்து கொண்டு cabin இல் வந்து அமர்ந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ரோசியைக்   காணவில்லை , , ரோ சியும் வசந்தியும் பெஸ்ட்  பிரென்ட்ஸ் , ரோசி ஆபிசுக்கு  கரெக்ட் டைமிற்கு வருவாள்  , மிகவும் புத்திசாலி , எப்போதுமே சிரித்த முகம் ,


வசந்தி நினைத்துப்  பார்த்தாள் , ரோசி இருந்தால் அவளிடம் மனது விட்டு பேசலாம் என்று , எதையும் யோசிக்க டைம் இல்லை , லஞ்ச் ப்ரேக்கில் ரோசியின்    நம்பர் ட்ரை செய்தாள் , கிடைக்கவில்லை , ஈவ்னிங் ஆபீஸ் விட்டு செல்லும்போது  பார்த்து விட்டுச்  செல்லவேண்டும் என நினைத்தாள் , ரோசிக்குக்  கல்யாணம் ஆகிவிட்டது , ஆனால்  அவள் வசந்தியிடம் எந்த விஷையத்தையும்  ஷேர்  செய்ததில்லை , வசந்தியும் அதைப்பற்றிக்  கவலைப்படாமல் தன்னுடைய ப்ரோப்ளேத்தை அவளிடம் சொல்வாள் .

ஈவினிங் வேலை முடிந்ததும் ரோசி வீட்டின் அட்ரெஸ் சை  ஆபீஸ்  பாயிடம் செக்  செய்து விட்டு , ரோசி வீட்டிற்குக்  கிளம்பினாள் , ரோசி இருந்தது  ஒரு அழகான அபார்ட்மென்ட் , வாசலில் காலிங் பெல்  அடித்தவுடன்  ரோசி கதவை திறந்தாள் , வசந்தியை பார்த்ததும் மிகுந்த ஆச்சரியம் ,  உள்ளே நுழைந்தாள் ,

வீடு மிகவும் நீட்டாக இருந்தது , ரோசி வேலைக்கு ஆள் இல்லை என்று சொன்னதாக ஞா பாகம் , "குழந்தைகள் எங்கே ?"என்றாள்  வசந்தி ,

"என்னுடைய பெண்ணிற்கு இன்று  first  periods  அதனால் லீவ் போட்டேன் வசந்தி" என்றாள் ,  :" தட்ஸ் எ வெரி குட் நியூஸ்" என்று சொன்னாள்   வசந்தி,

"அவளைக்  கூப்பிடு , சாரி நான் ஒரு கிப்டும் வாங்க வில்லை , எனக்கு தெரியாது" என்றாள் , ரோசி ,"அவளைக்  கூப்பிட முடியாது, நாம் தான் உள்ளே போய்ப்   பார்க்க வேண்டும் " என்றாள் .

 உள்ளே போனால் மிக அழகான ஒரு பெண் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்ததாள் , பக்கத்தில் வீ ல் சேர்  , வசந்திக்கு வார்த்தையே வரவில்லை ," உன் பையன் எங்கே?" என்று  கேட்டாள்  , அவன் வயலின்  கிளாஸ் போயிருக்கிறான் , இப்போது வருவான்" என்றாள் , , அதற்குள் காலிங் பெல் அடித்தது , வெளியில் சென்று  பார்த்தார்கள்  ரோசியும் வசந்தியும் .

 ஆட்டோ மேனுடன் ஒரு பையன் கூலிங் கிளாசுடன்
 நின்று கொண்டிருந்ததான் , வசந்திக்கு சம்மட்டியால் அடித்தது போல இருந்தது , இரண்டு குழந்தைகளும் physically  challenged , ஆனால்  ரோசியின்  முகத்தில் எப்போதுமே புன்னகைதான் ,

வசந்திக்கு மனது மிகவும் வருத்தமாக இருந்தது , எப்போதும் தன்னுடைய ப்ராப்ளேம்சைப்  பொறுமையாக காது கொடுத்து கேட்கும் ரோசிக்கு இவ்வளவு பெரிய பிரச்சிநையா என்று நினைத்தாள் , ரோசி இவளுக்கு டீ  கலப்பதற்குள்
குழந்தைகள்  இருவருக்கும் நூறாயிரம் ஹெல்ப் செய்ய வேண்டியிருந்தது .

மனதில் தன்னுடைய வேலைகளையும் , குழந்தைகளுடன் எரிந்து விழுவதையும் நினைத்து பார்த்தாள் , மனது வேதனைப்  பட்டது , ரோசி
நினைவாகவே வீடு திரும்பினாள் , அவளுடைய பையன் வருண் "அம்மா , நான் இப்போ உன்னோட பேசலாமா இல்லை நீ பிஸியா" என்றான்  .

"அம்மா எப்போதுமே நீ கூப்பிடும்போது பிஸி இல்லை கண்ணா "என்றாள்

வருணுக்கு ஒன்றும் புரியவில்லை , ஆனால் வசந்திக்கு வாழ்க்கை  நன்றாகப்
புரிந்தது.


No comments:

Post a Comment