Thursday, September 11, 2014

புதுமைப்  பெண்

மனதில் ஆயிரம் கனவுகளோ டு  கார்த்திக் , இன்று பெண் பார்க்க போகிறான் , அப்பா அம்மாவை  முழுதாக நம்பி, தனக்கு தகுந்த பெண்ணை தேடியிருப்பர்களே ன நினைத்து 

கார்த்தி இன்ஜினியரிங் முடித்து  யு எஸ்  சென்று எம் எஸ் படித்த பையன் 
கை நிறைய சம்பாதிக்கும் அழகான இளம் வாலிபன் , அவனுக்கு அம்மா அப்பா மீது மிகுந்த  நம்பிக்கை , தன கல்யாண பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்திருந்தான், 15 நாள் லீவில் ஊரிலிருந்து வந்திருக்கிறான்  பெண் பார்க்க .அப்பா பரசுராமன் ஒரு லீடிங் அட்வோகட், அம்மா வாசுகி ரிடயெரெட் 
பேன்கர் .பெண்ணின் பெயர் ஷக்தி , அவனுக்கு பாரதி மேல் கொள்ளை ப்ரியம் , பெயர் மிகவும் பிடித்திருந்தது , ஆயிரம் கனவுகளுடன் , அப்பா அம்மாவுடன் காரில் ஏறினான் , சக்தியுடன்  பே ஸ்   புக்  இ எ மெயில் எதிலயும் கநெகட்   ஆகவில்லை  அவளை   பிடித்தலோயிழ பேச கூடாது என நினைத்தான் 

எல்லாவற்றையும் யோசித்து கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டு 
வாசல் வந்துவிட்டது , பெண்ணின் அப்பா வரவேற்றார், வீடு மிக அழகாக இருந்தது ,  கார்த்திக் அனைவரோடும் ஆவலாக பேசினான் , பெண் வெளியில் வரவில்லை வாசுகி   பொறுமை இழந்தாள்  ," பெண்ணை வரச்சொல்லுங்கள் என்றாள் . பெண்ணுடைய அம்மா தர்ம சங்கடத்துடன் வெளியில் வந்தாள் , "பெண் பார்ப் பதை வீட்டில் சந்தையை போல வைத்துக்கொள்வதற்கு என் பெண் பிரியப்படவில்லை , இவினி ங் ஏதாவது பப் பில் மீட் செய்யலாம் என்கிறாள் என் பெண்" என்றாள்  , வாசுகிக்  தலை சுற்றியது , கார்த்திக் ஒரு நல்ல வேலையிலிருக்கும் நாகரீகமான  பையன் , அவன்  ஆபீசிலும் ஏகப்பட்ட பார்ட்டிகள் நடக்கும் , அதற்கு போவதுண்டு , ஆனால் ஒரு [பெண்ணுடன் சந்திப்பை எவ்வாறு பப்பில் துவங்குவது , அதுவும் முதல் சந்திப்பு , மிகவும் வருத்தப்பட்டாள்  , "சேரி மாமி நான் உள்ளே சென்று சக்தியை பார்கிரேன் " என்றாள் சக் தி உள்ளே ஒரு சிறிய ஷா ர்ட்ஸ்  போட்டுக்கொண்டு கம்ப்யு ட்டரில் முழுகி இருந்தாள்  , கார்த் திக்   அம்மாவின் வருகையை கண்டு கொள்ளா தது போல இருந்தாள்  , வாசுகிக்கு அவமானமாய் போய் விட்டது  , "கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தா ல் நன்றாக இருக்கும்மா" என்று சொன்னதற்கு , "ஆண்டி , நாம பிரக்டிகல் ஆக பேசுவோம் , நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்க போவதில்லை , கார்த்திக்கை அழைச்சுண்டு  போய்பப்பில் கொஞ்சம்  ஊற்றி கொடுத்தா ல் அவன் மனதில் என்ன இருக்கும் என்று தெரியும் , நான் கொஞ்சம் சாப்பிட்டால் என் மனதில் இருப்பதை அவனிடம் சொல்வேன் என்றாள்   , இதை கார்த்திக் அப்பாவிடம் சொன்னால் அவர் மனது எப்படியிருக்கும் என்பதை மிகவும் உணர்ந்த வாசுகி 
வெளியில் சென்று , கார்த்திக்கிடமும் , பரசுராமனிடமும்   "இந்த பெண்நமக்கு ஒத்து வரா து என்றாள் .  

No comments:

Post a Comment